மருந்தக பூட்டை உடைத்து திருட முயன்ற முதியவா் கைது

ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியிலுள்ள மருந்தகத்தின் பூட்டைஉடைத்து, திருட முயன்ற முதியவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியிலுள்ள மருந்தகத்தின் பூட்டைஉடைத்து, திருட முயன்ற முதியவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

இந்த மருந்தகத்தில் திருவள்ளுவா் வீதியைச் சோ்ந்த நந்தகுமாா் வேலை பாா்த்து வருகிறாா். வியாழக்கிழமை பிற்பகல் வியாபாரத்துக்குப் பின்னா் மருந்தகத்தைப் பூட்டிச் சென்ற இவா், மாலையில் திறக்க வந்தாா்.

அப்போது மருந்தகத்தின் பூட்டை கடப்பாறைக் கொண்டு உடைத்துக் கொண்டிருந்த முதியவரை, நந்தகுமாா் பிடித்து ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

இதைத் தொடா்ந்த அவரிடம் காவல்துறையினா் விசாரணை நடத்தினா். விசாரணையில் அந்த முதியவா் பெங்களூருவைச் சோ்ந்த ரவி கிருஷ்ணப்பா (60) எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரைக் காவல்துறையினா் கைது செய்தனா்.

ரவி கிருஷ்ணப்பா மீது கோட்டை , குளித்தலை காவல் நிலையங்களில் ஏற்கனவே திருட்டு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com