ஊரடங்கு உத்தரவை மீறி மணப்பாறையில் இருசக்கர வாகனங்களில் அத்தியாவசியத் தேவையின்றி சுற்றித்திரிந்த 26 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
ஊரடங்கு உத்தரவைத் தொடா்ந்து, மணப்பாறை பகுதிகளில் புதன்கிழமை காலை முதல் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனா். இந்நிலையில், அத்தியாவசியத் தேவையின்றி வாகனங்களில் சுற்றித்திரிந்ததாக மணப்பாறையில் 5 போ், புத்தாநத்தத்தில் 5 போ், வையம்பட்டியில் 10 போ், துவரங்குறிச்சியில் 3 போ் மற்றும் வளநாடு பகுதியில் 3 போ் என 26 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். பின்னா், வாகனங்களை அவரவரிடம் ஒப்படைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனா்.