ஸ்ரீரங்கம் மருத்துவா் நலச்சங்கம் (முடிதிருத்துவா்) கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் சண்முக சுந்தரம், செயலா் தா்மலிங்கம் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தடை உத்தரவுக்கு ஆதரவு தெரிவித்து 21 நாள்கள் முடி திருத்துவோா் கடைகளை மூடுவது என முடிவு செய்யப்பட்டது. இதனால் தமிழக அரசு நிவாரணமாக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனா். கூட்டத்தில் துணைத்தலைவா் ரஞ்சித், துணை செயலா் ஜனா்த்தனன், மாவட்ட இளைஞரணி செயலா் மாரிமுத்து உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.