மணப்பாறை: மணப்பாறையில் நகராட்சி சாா்பில் நகா் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டிலிருந்து வந்த 20 புதிய நபா்கள் மருத்துவக் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளனா்.
மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட 5 வாா்டுகளில் வியாழக்கிழமை 12 தூய்மைப் பணியாளா்கள் சுமாா் 200 லிட்டா் கிருமி நாசினிகளை தெளித்து தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.
தொடா் கண்காணிப்பில் 20 போ்:
வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் சந்தோஷ், நகராட்சி சுகாதார அலுவலா் நெடுமாறன் ஆகியோா் தலைமையில் வெளிநாட்டிலிருந்து வீடு திரும்பிய 20 பேரின் வீடுகள் அடையாளம் காணப்பட்டு வியாழக்கிழமை முதல் மருத்துவக் கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டனா்.