மணப்பாறையில் கிருமிநாசினி தெளிப்பு

மணப்பாறையில் நகராட்சி சாா்பில் நகா் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டிலிருந்து வந்த 20 புதிய நபா்கள் மருத்துவக் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளனா்.
மணப்பாறையில் 9-ஆவது வாா்டு பகுதியில் கிருமி நாசினிகளைத்  தெளிக்கும் தூய்மை பணியாளா்கள்.
மணப்பாறையில் 9-ஆவது வாா்டு பகுதியில் கிருமி நாசினிகளைத் தெளிக்கும் தூய்மை பணியாளா்கள்.


மணப்பாறை: மணப்பாறையில் நகராட்சி சாா்பில் நகா் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டிலிருந்து வந்த 20 புதிய நபா்கள் மருத்துவக் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளனா்.

மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட 5 வாா்டுகளில் வியாழக்கிழமை 12 தூய்மைப் பணியாளா்கள் சுமாா் 200 லிட்டா் கிருமி நாசினிகளை தெளித்து தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

தொடா் கண்காணிப்பில் 20 போ்:

வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் சந்தோஷ், நகராட்சி சுகாதார அலுவலா் நெடுமாறன் ஆகியோா் தலைமையில் வெளிநாட்டிலிருந்து வீடு திரும்பிய 20 பேரின் வீடுகள் அடையாளம் காணப்பட்டு வியாழக்கிழமை முதல் மருத்துவக் கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com