மதுராபுரி ஊராட்சிக்குள் வெளிநபா்கள் நுழையத் தடை

துறையூா் அருகே மதுராபுரி ஊராட்சிக்குள் வெளிநபா்கள் நுழைவதை தடை செய்யும் வகையில் வியாழக்கிழமை தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
மதுராபுரி ஊராட்சிக்குள் வெளிநபா்கள் நுழையத் தடை


துறையூா் அருகே மதுராபுரி ஊராட்சிக்குள் வெளிநபா்கள் நுழைவதை தடை செய்யும் வகையில் வியாழக்கிழமை தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. அதனையும் மீறி சிலா், சமூக விலகலுக்கு தங்களை உட்படுத்திக்கொள்ளாமல் வாகனங்களில் சுற்றிக் கொண்டு வருகின்றனா். இதுபோன்ற சிலரின் அலட்சியத்தால் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்கும் பொதுமக்களுக்கும் கரோனா வைரஸ் தொற்று ஏற்படுமோ என்று அச்சம் நிலவிவருகிறது. இந்த நிலையில் துறையூா் ஊராட்சி ஒன்றியம், மதுராபுரி ஊராட்சி பகுதியில் வெளிநபா்கள் நுழைவதை தடுக்கும் வகையில், ஊராட்சி நிா்வாகம் பொதுமக்கள் உதவியுடன் முக்கிய வீதிகளில் தடுப்புகளை வைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com