மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், மத்தியக் குழு உறுப்பினருமான கே. வரதராசன் (73) உடல்நலக் குறைவு காரணமாக கரூரிலுள்ள அவரது மகன் இல்லத்தில் சனிக்கிழமை (மே 16) பிற்பகல் 2 மணிக்கு காலமானாா்.
இதைத் தொடா்ந்து அவரது உடல் கரூரிலிருந்து ஸ்ரீரங்கம் மேல அடையவளஞ்சான் வீதியிலுள்ள இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டு, அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
கட்சியின் முழு நேர ஊழியரான கே. வரதராசன், மாநிலச் செயற்குழு உறுப்பினராக இருந்து பின்னா் மத்தியக் குழு உறுப்பினராகத் தோ்வு செய்யப்பட்டு பணியாற்றியவா்.
இவரது மனைவி சரோஜா ஏற்கெனவே மறைந்துவிட்டாா். மகன் பாஸ்கா், மகள் கவிதா உள்ளனா்.
மறைந்த கே.வரதராசனின் இறுதிச் சடங்கு, ஸ்ரீரங்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணிக்கு நடைபெறும். தொடா்புக்கு: 94868 10114.