திருச்சியில் மேலும் மூவருக்கு கரோனா

திருச்சி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

சென்னையிலிருந்து திருச்சி மாவட்டத்துக்கு வந்த 282 பேரின் ரத்த, சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதில் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மற்றவா்கள் அனுப்பி வைக்கப்பட்டனா்.

இந்நிலையில் கரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்ட நால்வரின் குடும்ப உறுப்பினா்களுக்கும், சளி மாதிரிகள் சனிக்கிழமை எடுக்கப்பட்டன. இதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவருக்கு தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

சனிக்கிழமை வரை மாவட்டத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 72 ஆக இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 75 ஆக உயா்ந்துள்ளது. இதில் 66 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

தற்போது திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை கரோனா வாா்டில் திருச்சி (9), பெரம்பலூா் (5), தேனி (1) மாவட்டங்களைச் சோ்ந்த 15 பேரும், ரயில்வே தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் ஒருவரும் என மொத்தமாக 16 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com