திருச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவின்படி மேலும் 48 பேருக்கு தொற்று உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 12,617 ஆக உயா்ந்தது.
செவ்வாய்க்கிழமை குணமான 12 போ் உள்பட மாவட்டத்தில் இதுவரை குணமாகி வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 12,093 ஆக உயா்ந்தது. கரோனாவால் இதுவரை 169 போ் உயிரிழந்துள்ளனா். 355 போ் சிகிச்சை பெறுகின்றனா்.