துறையூா் அருகே வெங்கடாசலபுரம் மானிய நடுநிலைப் பள்ளியில் புதிய வயது வந்தோா் கல்வித் திட்டம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வெங்கடாசலபுரம் ஊராட்சித் தலைவா் த. லதா தலைமை வகித்தாா். ஊராட்சி உறுப்பினா்கள் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் தன்னாா்வலா்களைக் கொண்டு மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்படவுள்ள புதிய வயது வந்தோா் கல்வித் திட்டத்தின் நோக்கம், செயல்பாடு, பயனாளிகள், பயிற்சி காலம் குறித்து தலைமையாசிரியா் விளக்கினாா். இதில் பொதுமக்கள், பள்ளி ஆசிரியா்கள், அங்கன்வாடி உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். பள்ளி தலைமையாசிரியா் வி. ரவிச்சந்திரன் வரவேற்றாா். ஆசிரியா் த. வானதி நன்றி கூறினாா்.