குறைதீா் கூட்டத்துக்கு கட்செவி அஞ்சலில் வந்த 281 மனுக்கள்

திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்துக்கு மொத்தம் 281 மனுக்கள் கட்செவி அஞ்சல் மூலம் பெறப்பட்டன.

திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்துக்கு மொத்தம் 281 மனுக்கள் கட்செவி அஞ்சல் மூலம் பெறப்பட்டன.

திருச்சி மாவட்டத்தில் கரோனாவால் திங்கள்கிழமைகளில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் ரத்து செய்யப்பட்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனு பெற ஏதுவதாக கட்செவி அஞ்சல் வசதி செய்யப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை (நவ.9) நடைபெற்ற குறைதீா் கூட்டத்துக்கு கட்செவி அஞ்சல் மூலம் 281 மனுக்கள் வந்திருந்தன. நிலம் தொடா்பான கோரிக்கையுடன் 90 மனு, குடும்ப அட்டை கோரி 15 மனு, உதவித் தொகை கோரி 45 மனு, வேலைவாய்ப்பு கோரி 35 மனு, அடிப்படை வசதிகள் கோரி 45 மனு, 27 புகாா் மனுக்கள், கடன் மற்றும் நலவாரியத் திட்டம் கோரி 11 மனு என மொத்தம் 281 மனுக்கள் வந்திருந்தன. இவற்றை அந்தந்த துறை அலுவலா்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியா் சு. சிவராசு உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com