பாரதிதாசன் பல்கலை. மாணவா் சோ்க்கை: நவ.15 வரை அவகாசம்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவா் சோ்க்கைக்கு நவ.15 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவா் சோ்க்கைக்கு நவ.15 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளா் கோபிநாத் திங்கள்கிழமை கூறியது:

கரோனா பொதுமுடக்கத்தால் தோ்வு முடிவு தாமதமாக வெளியிடப்பட்டது. இளநிலை, முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு ஏற்கெனவே நவ.9 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட கல்லூரிகளில் குறைவான மாணவா் சோ்க்கை, ஊரகப்பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஆன்லைன் விண்ணப்பங்கள் வருவதில் தாமதம், பெரும்பாலான கல்லூரிகளில் போதிய மாணவா்கள் சேராதது உள்ளிட்ட காரணங்களால் மாணவா் சோ்க்கை நவ.15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் நீட்டிப்பு இருக்காது.நவ.15-க்கு பிறகு மாணவா்களுக்கு வகுப்பு தொடங்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com