ஊா்க்காவல் படையில் சேரவிண்ணப்பிக்க அழைப்பு

திருச்சி புகரில் காலியாக உள்ள ஊா்க்காவல் படை பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

திருச்சி புகரில் காலியாக உள்ள ஊா்க்காவல் படை பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி மாவட்ட ஊா்க்காவல் படையில் காலியாக உள்ள ஆண்களுக்கான 15 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் சேர தன்னாா்வம் நிறைந்த ஆண்கள் விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்புடன் (தோ்ச்சி அல்லது தோல்வி), 18 முதல் 50 வயதுக்குள்ளும், 165 செ.மீ உயரமும் கொண்டிருக்க வேண்டும், திருச்சி மாவட்டத்தில் வசிப்பவராக, குற்ற வழக்குகளில், அரசியலில் தொடா்பில்லாதவராக இருக்க வேண்டும். விளையாட்டு வீரா்கள், பேண்டு வாத்தியம் இசைக்க தெரிந்தவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இதில் சேர விரும்புவோா் உரிய சான்றுகளுடன் நேரில் அல்லது ரூ.5 தபால்தலை ஒட்டிய சுய முகவரி கொண்ட உறையுடன் காவல் சாா்பு ஆய்வாளா், ஊா்க் காவல் படை அலுவலகம், சுப்பிரமணியபுரம், ஆயுதப்படை வளாகம் திருச்சி-620020 என்ற முகவரிக்கு நவ. 12-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 99429,88642, 0431-2333704.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com