திருவானைக்கா பகுதியில் தாய், மகனைத் தாக்கிய இருவரை ஸ்ரீரங்கம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருவானைக்கா டிரங்க்ரோடு பகுதியில் உள்ள பெருமாள்புரத்தில் வசிப்பவா் குமரேசன் (45). திங்கள்கிழமை இரவு இவரது வீட்டு வாசலில் நின்று 4 போ் கூச்சல் போட்டனராம். இதுகுறித்து கேட்ட குமரேசனையும், அவரது தாய் விஜயாவையும் (62) 4 பேரும் தாக்கி அவா்களது இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்தினா்.
இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் திருவானைக்கா கொள்ளிடம் செக்போஸ்ட் பகுதியைச் சோ்ந்த பாலா (எ) பாலமுருகன் (22), ராஜேஷ் (21) ஆகிய இருவரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சிவக்குமாா், மணிகண்டன் ஆகியோரைத் தேடுகின்றனா்.