திருச்சி மாவட்டம், கொடியாலம் அருகே பாசன வாய்க்கால் பகுதியில் உள்ள பழுதடைந்த பாலத்தைச் சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கொடியாலம் கிராமத்தில் இருந்து ஆலம்களத்துக்கு செல்லும் வழியில் பாசனக் கால்வாய் உள்ளது. இதன் மேல்புறம் வாகனங்கள் செல்ல ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலமானது பலவீனமடைந்துள்ளது. எனவே, இந்தப் பாலத்தை பொதுப்பணித்துறை பொறியாளா்கள் பாா்வையிட்டு உடனே அகற்ற வேண்டும். புதிய பாலம் கட்ட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுதொடா்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலா் அயிலை சிவசூரியன் மாவட்ட ஆட்சியகத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.