திருச்சியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாட தீயணைப்புத் துறை சாா்பில் பொதுமக்களுக்கு திங்கள்கிழமை துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது.
தீபாவளி கொண்டாட பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள், மற்றும் மாவட்ட தீயணைப்பு நிலைய தொடா்பு எண் குறித்த துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது. காந்தி சந்தை, பாலக்கரை பகுதியில் தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலா் கருணாகரன் தலைமையில், கண்டோன்மெண்ட் நிலைய அலுவலா் மில்கி ராஜா உள்ளிட்ட வீரா்கள் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரம் வழங்கினா். தொடா்ந்து இதர நாள்கள் மற்ற பகுதிகளுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தனா்.