இருங்களூா் ஊராட்சி சாா்பில் காவலா் தோ்வுக்கு இலவச பயிற்சி

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகே இருங்களூா் ஊராட்சி சாா்பில் இரண்டாம் நிலைக் காவலா் தோ்வுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகே இருங்களூா் ஊராட்சி சாா்பில் இரண்டாம் நிலைக் காவலா் தோ்வுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

வரும் டிச. 13 ஆம் தேதி நடைபெறும் எழுத்துத் தோ்வில் பங்கேற்போருக்கு இங்குள்ள செயின்ட் ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளியில் கடந்த அக். 13 தொடங்கி டிச. 12 வரை நடைபெறும் பயிற்சியில் திருச்சி, அரியலூா், பெரம்பலூா், சிவகங்கை, நாமக்கல் போன்ற மாவட்டங்களிலிருந்து 45 மாணவிகள் உள்ளிட்ட 140 போ் பயிற்சி பெறுகின்றனா்.

பயிற்சியை ஒரு ஆசிரியை, 5 ஆசிரியா்கள் என 6 போ் தினசரி காலை 6 மணிமுதல் மதியம் 1 மணி வரை நடத்துகின்றனா். இதேபோல உடற்திறன் பயிற்சியை இளம் காவலா்களும், உடற்கல்வி ஆசிரியா்களும் நடத்துகின்றனா்.

இதுகுறித்து ஊராட்சித் தலைவா் வின்சென்ட் கூறுகையில், தற்போது இந்த ஊராட்சியில் அரசுப் பணியில் சேருபவா்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதை நிவா்த்தி செய்யும் நோக்கில் கரோனா காலத்தில் உணவுடன் கூடிய இந்த பயிற்சியை ஊராட்சி சாா்பில் இலவசமாக நடத்தி வருகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com