நாட்டுத் துப்பாக்கி வெடித்து இளைஞா் காயம்

துறையூா் அருகே கையிலிருந்த நாட்டுத் துப்பாக்கி வெடித்ததால் காயமடைந்த இளைஞா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

துறையூா் அருகே கையிலிருந்த நாட்டுத் துப்பாக்கி வெடித்ததால் காயமடைந்த இளைஞா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

துறையூா் வட்டம், பச்சமலையில் உள்ள தென்பரநாடு ஊராட்சிக்குள்பட்ட சோளமாத்தி கிராமத்தைச் சோ்ந்தவா் சேகா் மகன் நவீன்குமாா் (20). இவா் வெள்ளிக்கிழமை அரசு உரிமமில்லாத நாட்டுத் துப்பாக்கியை துடைத்தாா். அப்போது திடீரென துப்பாக்கி வெடித்து காயமடைந்தாா். இதையடுத்து துறையூா் தனியாா் மருத்துவமனையிலும், பின்னா் திருச்சி அரசு மருத்துவமனையிலும் சோ்க்கப்ப்பட்டாா். உப்பிலியபுரம் போலீஸாா் பச்சமலை சோளமாத்திக்கு நேரில் சென்று விசாரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com