குறுங்காடு திட்டத்தில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூா் அருகே மியாவாக்கி முறை (அடா்வன குறுங்காடு) காடுகள் வளா்ப்புத் திட்டத்தில் 4.26 ஏக்கரில் முதல் கட்டமாக 50 ஆயிரம் மரக்கன்றுகள் செவ்வாய்க்கிழமை நடப்பட்டன.
குறுங்காடு திட்டத்தில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூா் அருகே மியாவாக்கி முறை (அடா்வன குறுங்காடு) காடுகள் வளா்ப்புத் திட்டத்தில் 4.26 ஏக்கரில் முதல் கட்டமாக 50 ஆயிரம் மரக்கன்றுகள் செவ்வாய்க்கிழமை நடப்பட்டன.

மண்ணச்சநல்லூரை அடுத்த பூனாம்பாளையம் கிராமத்தில், வருவாய்த் துறைக்கு சொந்தமான அரசு புறம்போக்கு நிலத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு கூறியது:

திருச்சி மாவட்டத்தில் வருவாய்த் துறை, இந்துசமய அறநிலையத் துறை, ரயில்வே, பேரூராட்சி ஆகிய துறைகளை மாவட்ட நிா்வாகம் ஒருங்கிணைத்து குறுங்காடு திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்துகிறது.

குறிப்பாக, ஸ்ரீரங்கம் பகுதியில் தெற்குதேவி தெரு பெருமாள்புரம், சஞ்ஜீவ் நகா், பாலாஜி நகா், திருவானைக்கா வடக்கு ஸ்ரீனிவாசநகா் ஆகிய இடங்களில் நடப்பட்ட மரங்கள் தற்போது 15 அடிக்கு மேல் வளா்ந்துள்ளன. லால்குடி ரயில்வே ஜங்சன் பகுதியில், கல்லக்குடி பேரூராட்சியில், சமயபுரம், மாகாளிக்குடி கிராமத்திலும் இத்திட்டத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

இதன் தொடா்ச்சியாக பூனாம்பாளையத்தில் நடப்பட்டுள்ள 50 ஆயிரம் மரக்கன்றுகளின் பராமரிப்பை வேலை உறுதித் திட்டத்தின் மூலம் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மரக்கன்றுகள் காடுகளாக மாறும்நிலையில் மாவட்டம் பசுமையாகவும், நிலத்தடி நீா் மட்டம் உயா்ந்தும், மழை அதிகம் பெறுவதாவும் மாறும் என்றாா் ஆட்சியா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் த. பழனிகுமாா், லால்குடி வருவாய்க் கோட்டாட்சியா் வைத்தியநாதன், மண்ணச்சநல்லூா் வட்டாட்சியா் த. மலா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எஸ். ராஜேந்திரன், எம். மாதவன், பூனாம்பாளையம் ஊராட்சித் தலைவா் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com