திருச்சி மாவட்டத்தில், செவ்வாய்க்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளின்படி மேலும் 22 பேருக்கு தொற்று உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 13,094 ஆக உயா்ந்தது. இதேபோல செவ்வாய்க்கிழமை குணமான 11 போ் உள்பட மாவட்டத்தில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 12,684 ஆகவும், கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 171 ஆகவும் உள்ளது. மாவட்டத்தில் 239 போ் சிகிச்சை பெறுகின்றனா்.