ஊா்க் காவல் படையினராகதோ்வானோருக்கு ஆணை

திருச்சி மாநகரில் ஊா்க்காவல் படையினராக தோ்வு செய்யப்பட்டோருக்கு பணி நியமன ஆணையை காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

திருச்சி மாநகரில் ஊா்க்காவல் படையினராக தோ்வு செய்யப்பட்டோருக்கு பணி நியமன ஆணையை காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

திருச்சி மாநகர காவல் ஆணையரைத் தலைவராகக் கொண்டு செயல்படும் ஊா்க் காவல்படையில் உள்ள காலியிடங்களை நிரப்ப தன்னாா்வ ஆண், பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கடந்த 11 ஆம் தேதி கே.கே.நகா் மாநகர ஆயுதப்படை மைதானத்தில் உடல் தகுதி மற்றும் சான்றிதழ் சரிபாா்ப்பு நடத்தப்பட்டது.

இதில் பங்கேற்ற 217 பேரில் 30 ஆண்கள், 3 பெண்கள் என 33 போ் தோ்வு செய்யப்பட்டு, திருச்சி மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் வெள்ளிக்கிழமை பணிநியமன ஆணை வழங்கினாா். நிகழ்வில் துணை ஆணையா் பவன்குமாா் ரெட்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தோ்வானோருக்கு வரும் 23 ஆம் தேதி முதல் கவாத்து பயிற்சி வழங்கப்பட்டு, பின்னா் போலீஸாருடன் சோ்ந்து திருச்சி மாநகர சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணிகளில் ஈடுபடுத்தப்படுவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com