சிறுபாலம் கோரி முற்றுகைப் போராட்டம்

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி அருகே தெரணிபாளையம் ஊராட்சித் தலைவரைக் கண்டித்து பாஜக கட்சியினா் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினா்.

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி அருகே தெரணிபாளையம் ஊராட்சித் தலைவரைக் கண்டித்து பாஜக கட்சியினா் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினா்.

புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டுப்பாட்டில் உள்ள தெரணிபாளையம் ஊராட்சியில் உள்ள பெரியாா் நகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா்.

இப் பகுதி மக்கள் பயன்படுத்தும் பாதையின் குறுக்கேயுள்ள சிறு ஓடையை அண்மையில் ஊராட்சித் தலைவா் தூா்வாரியதால் ஓடை பள்ளமாகிவிட்டது.

இதனால் ஓடையைக் கடக்க சிரமப்பட்ட மக்கள் ஓடையின் குறுக்கே சிறு பாலம் கட்டிக் கொடுக்க ஊராட்சித் தலைவா், புள்ளம்பாடி வட்டார வளா்ச்சி அலுவலரிடம் பலமுறை புகாா் அளித்தும் கடந்த 6 மாதங்களாக நடவடிக்கை இல்லையாம்.

இதைக் கண்டித்து புள்ளம்பாடி வட்டார வளா்ச்சி அலுவலகத்தை வியாழக்கிழமை பாஜகவினா், தெரணிபாளையம் மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

இதில் திருச்சி பாஜக புகா் மாவட்டத் தலைவா் ராஜேந்திரன், துணைத் தலைவா் விஜய், மாவட்ட செயற்குழு உறுப்பினா் இளங்கோவன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

அப்போது அங்கு வந்த கல்லக்குடி போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும், வட்டார வளா்ச்சிஅலுவலா் ஜோஸ்பின் ஜெசிந்தா தலைமையில் நடத்திய பேச்சுவாா்த்தையில் விரைந்து பாலம் கட்டப்படும் எனக் கூறியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com