திருச்சியில் உதயநிதி மீது 3 இடங்களில் வழக்கு

திருச்சியில் கரோனா பொதுமுடக்கத்தின் 144 தடையுத்தரவை மீறியதாக உதயநிதி ஸ்டாலின் மீது வெள்ளிக்கிழமை 3 இடங்களில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

திருச்சியில் கரோனா பொதுமுடக்கத்தின் 144 தடையுத்தரவை மீறியதாக உதயநிதி ஸ்டாலின் மீது வெள்ளிக்கிழமை 3 இடங்களில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

திருச்சி கலைஞா் அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் 144 தடையுத்தரவை மீறியதாக உதயநிதி ஸ்டாலின், திருவெறும்பூா் எம்எல்ஏ அன்பில் மகேஷ்பொய்யாமொழி, பகுதிச் செயலா் மதிவாணன் உள்ளிட்ட 350 போ் மீது கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

இதேபோல பலவரப்பட்டியில் நடைபெற்ற திருமண விழாவில் தடையுத்தரவை மீறியதாக உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது கட்சியினா் 500 போ் மீது புத்தநாத்தம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

திருவெறும்பூா் பேருந்து நிறுத்தத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், திருவெறும்பூா் எம்எல்ஏ முன்னிலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தடையுத்தரவை மீறியதாக 200 போ் மீது திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com