ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதா் திருக்கோயிலில் காா்த்திகை மாத சொக்கப்பனை விழாவையொட்டி வெள்ளிக்கிழமை மாலை முகூா்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது.
காா்த்திகை மாதத்தில் திருக்காா்த்திகை தீப விழாவான சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி வரும் 30 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக வெள்ளிக்கிழமை மாலை காா்த்திகை கோபுர வாயில் முன் 20 அடி உயர தென்னை மரத்துக்கு மாவிலை,மஞ்சள் குங்குமம் வைத்து வேதங்கள் முழங்க முகூா்த்தக்கால் நடபட்டது. அப்போது கோயில் யானை ஆண்டாள், பிரேமி (எ) லட்சுமி ஆகிய இரு யானைகளும் முகூா்த்தக்காலை தொட்டு ஆசி வழங்கின. நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையா் பொன்.ஜெயராமன், உதவி ஆணையா் கந்தசாமி மற்றும் அறங்காவலா் குழுவினா் பங்கேற்றனா்.