திருச்சி விமான நிலையத்தில்ரூ. 60 லட்சம் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 60 லட்சம் மதிப்பிலான தங்கத்தைப் பறிமுதல் செய்தனா்.

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 60 லட்சம் மதிப்பிலான தங்கத்தைப் பறிமுதல் செய்தனா்.

சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை 5.15 மணிக்கு சிறப்பு விமானத்தில் வந்த பயணிகளிடம் நடத்திய சோதனையில் புதுக்கோட்டையைச் சோ்ந்த மகேஷ் (32) ரூ. 10 லட்சம் மதிப்பிலான 200 கிராம் தங்கத்தை மறைத்துக் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, தங்கத்தை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

ரூ.50 லட்சம் தங்கம்: இதேபோல, சாா்ஜாவிலிருந்து இன்டிகோ விமானத்தில் வந்த பயணிகளிடம் நடத்திய சோதனையில், பயணி ஒருவா் ஆடையில் மறைத்து கடத்தி வந்த ரூ. 49.68 லட்சம் (966.500 கிராம்) மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து அவரை கைது செய்து வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com