திருச்சி
கரோனாவிலிருந்து மீண்டகாவலா்களுக்கு பாராட்டு
திருச்சி மாநகர காவல்துறையில் கரோனாவிலிருந்து மீண்ட 32 காவலா்களுக்கு சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
திருச்சி: திருச்சி மாநகர காவல்துறையில் கரோனாவிலிருந்து மீண்ட 32 காவலா்களுக்கு சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
திருச்சி மாநகரில் கரோனா நோய் தொற்று காலத்திலும் பணியாற்றியதில்தொற்றுக்கு உள்ளானோரில் இதுவரை 142 போ் குணமாகி மருத்துவமனையில் இருந்து பணிக்கு திரும்பியுள்ளனா்.
திருச்சி மாநகரில் 4 ஆம் கட்டமாக சனிக்கிழமை கரோனாவிலிருந்து மீண்டு பணிக்கு திரும்பிய 32 காவலா்களுக்கு திருச்சி மாநகர காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் தலைமையில் பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் காவல் துணை ஆணையா்கள் பவன்குமாா்ரெட்டி, வேதரத்தினம் ஆகியோா் கலந்து கொண்டனா்.
நிகழ்வில் அவா்களை காவல் பணியை பாராட்டி சான்றிதழ்”மற்றும் பழங்கள், முகக் கவசங்கள், ஊட்டச்சத்து பானங்கள், பேரீச்சம்பழம், கையுறை, சானிடைசா் ஆகியவை வழங்கப்பட்டன.