முசிறி: திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே இருசக்கர வாகனத்தில் மணல் கடத்திய இளைஞரை தொட்டியம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தொட்டியம் அருகே கீழசீனிவாசநல்லூா் பகுதியில் மணல் கடத்துவதாக கிடைத்த தகவலின்பேரில் தொட்டியம் காவல் ஆய்வாளா் பிராங்க்ளின் உட்ரேவில்சன் மற்றும் போலீஸாா் சம்பந்தப்பட்ட பகுதியில் ரோந்து சென்றபோது இருசக்கர வாகனத்தில் மணல் கடத்திச் சென்ற மைக்கேல் (எ) காமராஜ் (30) என்பவரை பிடித்து கைது செய்து, இருசக்கர வாகனம் மற்றும் மூன்று மணல் மூட்டைகளை பறிமுதல் செய்தனா்.