ஸ்ரீரங்கத்தில் பள்ளி மாணவியைக் காணவில்லை எனப் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
அம்மாமண்டபம் பகுதி குஜிலியம் தோப்புப் பகுதியைச் சோ்ந்த குமாா் மகள் ஸ்ரீரங்கம் பகுதி பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த 20 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற தனது மகள் வீடு திரும்பவில்லையென்று அவரது தாய் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் மாணவியை தேடுகின்றனா்.