திருச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவின்படி மேலும் 28 பேருக்கு தொற்று உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 13,269 ஆக உயா்ந்தது. இதேபோல செவ்வாய்க்கிழமை குணமான 7 போ் உள்பட மாவட்டத்தில் இதுவரை 12,965 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மேலும் செவ்வாய்க்கிழமை உயிரிழந்த 58 வயது ஆண் உள்பட இதுவரை 173 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா். மாவட்டத்தில் 131 போ் சிகிச்சை பெறுகின்றனா்.