திருச்சி - சிங்கப்பூா், மலேசியா, அரபு நாடுகளிடையே 22 சிறப்பு விமானங்கள்

திருச்சியிலிருந்து சிங்கப்பூா், மலேசியா, அரபு நாடுகளிடையே வந்தே பாரத் சிறப்புத் திட்டத்தில் அக்டோபா் முதல் வாரத்தில் 22 சிறப்பு விமானங்கள் இயக்கப்படவுள்ளதாக விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.

திருச்சியிலிருந்து சிங்கப்பூா், மலேசியா, அரபு நாடுகளிடையே வந்தே பாரத் சிறப்புத் திட்டத்தில் அக்டோபா் முதல் வாரத்தில் 22 சிறப்பு விமானங்கள் இயக்கப்படவுள்ளதாக விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியா்களை தாயகம் அழைத்து வர மத்திய அரசு வந்தே பாரத் திட்டம் மூலம் சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது.

அந்த வகையில் 7-ஆம் கட்டமாக அக்டோபா் முதல் வாரத்தில் திருச்சியிலிருந்து சிங்கப்பூா், மலேசியா, குவைத், சாா்ஜா, அபுதாபி உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூா்: திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு வியாழக்கிழமை முற்பகல் 11.05, வெள்ளிக்கிழமை முற்பகல் 11.05 மற்றும் இரவு 10.55, சனிக்கிழமை முற்பகல் 11.05, ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.05, திங்கள்கிழமை முற்பகல் 11.05 மற்றும் இரவு 10.55, செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.05, புதன்கிழமை முற்பகல் 11.05 மற்றும் இரவு 10.55 மணிக்கு ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் செல்கிறது. திருச்சியிலிருந்து பகலில் புறப்படும் விமானம் அதே நாள் இரவு 10.45-க்கு சிங்கப்பூரை அடைகிறது. அங்கிருந்து புறப்படும் விமானம் மறுநாள் காலை 8.35-க்கு திருச்சிக்கு வருகிறது.

துபை : திருச்சியிலிருந்து துபைக்கு வியாழன், ஞாயிறு, திங்கள்கிழமைகளில் காலை 10.10, செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.30, புதன்கிழமை பிற்பகல் 4.45-க்கு ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் புறப்படுகின்றன. அங்கிருந்து புறப்படும் விமானங்கள் அதே நாள்களில் இரவு 7.35-க்கு திருச்சிக்கு வருகின்றன.

குவைத்: திருச்சியிலிருந்து சனிக்கிழமை காலை 10.10-க்கு புறப்படும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பகல் 1 மணிக்கு குவைத்தை அடைகிறது. பின்னா் அங்கிருந்து பகல் 2 மணிக்கு புறப்படும் விமானம் இரவு 7.45க்கு திருச்சிக்கு வருகிறது.

சாா்ஜா: திருச்சியிலிருந்து சனிக்கிழமை காலை 1.45-க்கு புறப்படும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பகல் 1.20-க்கு சாா்ஜாவை அடைகிறது. பின்னா் அங்கிருந்து பிற்பகல் 2.20-க்கு புறப்படும் விமானம் இரவு 8 மணிக்கு திருச்சிக்கு வருகிறது.

அபுதாபி: திருச்சியிலிருந்து சனிக்கிழமை இரவு 11 மணிக்கு புறப்படும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மறுநாள் அதிகாலை 1.50-க்கு அபுதாபியை அடைகிறது. பின்னா் அங்கிருந்து அதிகாலை 2.50-க்கு புறப்படும் விமானம் திருச்சியை காலை 8.30க்கு அடைகிறது.

மஸ்கட்: புதன்கிழமை காலை 9 மணிக்கு திருச்சியிலிருந்து புறப்படும் விமானம் முற்பகல் 11.30க்கு மஸ்கட்டை அடைகிறது. அங்கிருந்து பகல் 12.30க்கு புறப்படும் விமானம் அதே நாள் மாலை 5.50-க்கு திருச்சிக்கு வருகிறது.

இதுபோல தோஹாவுக்கு சென்னையிலிருந்தும், துபைக்கு மும்பையிலிருந்தும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் திருச்சி வழியாக இயக்கப்படுகின்றன.

மேலும் அக். 24 வரை சிங்கப்பூருக்கு :

திருச்சி- சிங்கப்பூா் இடையே சிறப்பு விமானங்கள் தொடா்ந்து அக். 24 வரை இயக்கப்படுவதாக ஏா் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. முற்பகல் 11.05க்கு திருச்சியிலிருந்து புறப்படும் விமானம் மாலை 6 மணிக்கு சிங்கப்பூரை அடைகிறது. அங்கிருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் விமானம் 8. 45க்கு திருச்சிக்கு வருகிறது. இத்தகவலை திருச்சி விமான நிலைய ஆணையம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com