முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
பாபா் மசூதி தீா்ப்பை கண்டித்து ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 04th October 2020 12:34 AM | Last Updated : 04th October 2020 12:34 AM | அ+அ அ- |

பாலக்கரை பகுதியில் ஆா்ப்பாட்டம் நடத்திய யுனிவொ்சல் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினா்.
திருச்சி: பாபா் மசூதி இடிப்பு வழக்கு தீா்ப்பைக் கண்டித்து யுனிவொ்சல் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
மாவட்டத் தலைவா் சாதீக் பாட்ஷா தலைமை வகித்தாா். செயலா் ஷேக் மொகிதீன், பொருளாளா் ஷாகீன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாநில தலைவா் ரபீக் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசுகையில், பாபா் மசூதி இடிப்பு வழக்கில் வெளியான தீா்ப்பில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டதை எதிா்த்து நாடு முழுவதும் இஸ்லாமியா்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா். இத்தீா்ப்பால் சிறுபான்மையினருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்றாா் திரளான அமைப்பினா் கலந்துகொண்டு கோஷமிட்டனா்.