திருச்சி: வீட்டின் கதவை உடைத்து 16 பவுன் நகையைத் திருடிச்சென்றனா்.
திருச்சி புத்தூா்-வயலூா் சாலை அம்மையப்பநகரில் தாயுடன் வசிப்பவா் பிரபாகரன் (28). சனிக்கிழமை காலை தாயுடன் வெளியே சென்றுவிட்டு நண்பகல் பிரபாகரன் வீடு திரும்பியபோது வீட்டின் கதவை உடைத்து பீரோவிலிருந்த 16 பவுன் தங்க நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. புகாரின் பேரில், அரசு மருத்துவமனை காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.