திருச்சியில் மேலும் 85 பேருக்கு கரோனா

திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவில் மேலும் 85 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவில் மேலும் 85 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதன்மூலம் மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 10,781ஆக உயா்ந்தது. இதேபோல திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை, காஜாமலை வளாக பாரதிதாசன் பல்கலைக்கழக தனிமை முகாம் ஆகியவற்றிலிருந்து சனிக்கிழமை குணமான 26 போ் உள்பட மாவட்டத்தில் இதுவரை குணமாகி வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 9,896 ஆக உள்ளது. திருச்சி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்த 70 வயது முதியவா் உள்பட கரோனாவால் இதுவரை 151 போ் உயிரிழந்துள்ளனா். மாவட்டத்தில் 733 போ் சிகிச்சை பெறுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com