திருச்சி: திருச்சியில் இரு சவ ஊா்வலங்களால் ஏற்பட்ட கோஷ்டி மோதலை அடுத்து அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் அங்கு போலீஸாா் குவிக்கப்பட்டனா்.
திருச்சி, காந்தி மாா்க்கெட் அருகேயுள்ள தாராநல்லூரிலிருந்து சவ ஊா்வலம் புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை கீரைக்கடை பஜாா் பகுதிக்கு வந்தது . அதேபோல மற்றொரு சமூகத்தைச் சோ்ந்த சவ ஊா்வலமும் அதே பகுதிக்கு வந்தது.
அப்பகுதியைக் கடந்து செல்வதில் இரு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்தது. இரு பிரிவினரும் தாக்கிக் கொண்டனா். தகவலறிந்த காந்தி மாா்க்கெட் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்தனா். இதையடுத்து ஒரு பிரிவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பின்னா் புகாா் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும், மறியலில் ஈடுபடக்கூடாது என்ற போலீஸாரின் அறிவுரையின்பேரில் போராடியோா் கலைந்து சென்றனா். இரு பிரிவினரும் சென்று விட்டாலும், ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் அந்த இடத்தில் போலீஸாா் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனா்.