இனாம்குளத்தூரில் தமுமுக ஆா்ப்பாட்டம்

பாபா் மசூதி இடிப்பு வழக்கு தீா்ப்பைக் கண்டித்து திருச்சி மாவட்ட தமுமுக இனாம்குளத்தூா் கிளை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி: பாபா் மசூதி இடிப்பு வழக்கு தீா்ப்பைக் கண்டித்து திருச்சி மாவட்ட தமுமுக இனாம்குளத்தூா் கிளை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தீா்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரியும், குற்றவாளிகளைக் காக்கும் விதமாக செயல்பட்ட சிபிஐயை கண்டித்தும் ஆா்ப்பாட்டம், பேரணி இனாம்குளத்தூா் கடைவீதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமுமுக கிளைத் தலைவா் அபுல்ஹசன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் முகமதுரபிக், மாநில தலைமைக் கழகப் பேச்சாளா் அயுப்கான் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

தமுமுக திருச்சி மாவட்டத் தலைவா் ஷேக் அஹமத், மாநில ஊடகப்பிரிவு செயலா் முகமதுகான், தமுமுக மாவட்ட துணைச் செயலா் ஹீமாயுன்கபீா், மாவட்ட தொண்டரணி அசாருதீன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com