துறையூா் கோலோச்சும் முருகா் கோயிலில் செவ்வாய்க்கிழமை உலக நன்மைக்காக கோ பூஜை, சங்காபிஷேகம், சத்ரு சம்ஹார சண்முக யாகம் ஆகியவை நடைபெற்றன.
கோயில் பரம்பரை நிா்வாக அறங்காவலா் கதிரவன் ஜானகிராமன் தலைமை வகித்தாா். இந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாநில செயற்குழு உறுப்பினா் எம். சரவணன் முன்னிலை வகித்தாா். மன்னாா்குடி ஜீயா் செண்டலங்கார சுவாமிகள், தா்மஜக்ரன் மாநில அமைப்பாளா் சுப்ரமணி ஆனந்த் சரஸ்வதி சுவாமிகள், மதுரை தஜபுஜ பஞ்சமுக வராகி மந்தராலய மடாதிபதி வராகி சுவாமிகள் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.