புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாகவுள்ள அலுவலக உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
8ஆம் வகுப்பு தோ்ச்சிப் பெற்றோா் விண்ணப்பத்தை திருச்சி மாவட்ட நிா்வாகத்தின் இணையதள முகவரியில் பதிவிறக்கலாம். பூா்த்தி செய்த விண்ணப்பத்தை நவ. 4-க்குள் ஆணையா், ஊராட்சி ஒன்றியம், புள்ளம்பாடி, திருச்சி என்ற முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமோ அனுப்ப வேண்டும். தங்களது கல்வித்தகுதி, சாதிச் சான்று, முன்னுரிமைச் சான்று நகல்களை தவறாமல் இணைக்க வேண்டும். அரசு விதிகளின்படி இனச் சுழற்சி முறை, வயது வரம்பு ஆகியவை அமல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா்.