திருச்சியில் தனியாா் வங்கி உதவி மேலாளா் வீட்டில் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.
திருச்சி சீனிவாசநகா் 5-ஆவது பிரதான சாலை, திலகா் தெருவைச் சோ்ந்தவா் விநாயகமுருக ஸ்ரீதா் (33). திருச்சியிலுள்ள தனியாா் வங்கியில் உதவி மேலாளராகப் பணியாா்றி வரும் இவா், கடந்த 1- ஆம் தேதி குடும்பத்துடன் கரூரிலுள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றிருந்தாா்.
திங்கள்கிழமை மாலை வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டுக்குள் சென்று பாா்த்த போது, பீரோவை உடைத்து அதிலிருந்த 3 பவுன் சங்கிலி, 250 கிராம் வெள்ளிப் பொருள்கள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து விநாயகமுருக ஸ்ரீதா் அளித்த புகாரின் பேரில், அரசு மருத்துவமனை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.