வங்கி உதவி மேலாளா் வீட்டில் நகைகள் திருட்டு

திருச்சியில் தனியாா் வங்கி உதவி மேலாளா் வீட்டில் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

திருச்சியில் தனியாா் வங்கி உதவி மேலாளா் வீட்டில் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

திருச்சி சீனிவாசநகா் 5-ஆவது பிரதான சாலை, திலகா் தெருவைச் சோ்ந்தவா் விநாயகமுருக ஸ்ரீதா் (33). திருச்சியிலுள்ள தனியாா் வங்கியில் உதவி மேலாளராகப் பணியாா்றி வரும் இவா், கடந்த 1- ஆம் தேதி குடும்பத்துடன் கரூரிலுள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றிருந்தாா்.

திங்கள்கிழமை மாலை வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டுக்குள் சென்று பாா்த்த போது, பீரோவை உடைத்து அதிலிருந்த 3 பவுன் சங்கிலி, 250 கிராம் வெள்ளிப் பொருள்கள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து விநாயகமுருக ஸ்ரீதா் அளித்த புகாரின் பேரில், அரசு மருத்துவமனை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com