லால்குடி; நான்கு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த ஆயுதப்படைக் காவலரின் மகனை லால்குடி அனைத்து மகளிா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி ஜெயில் காா்னா் பகுதி புதிய காவலா் குடியிருப்பில் வசிப்பவா் மகாலிங்கம், திருச்சி ஆயுதப்படைக் காவலா். இவரது மகன் காா்த்தி (26). இவரும் தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியைச் சோ்ந்த சிவக்குமாா் மகள் சுமதியும் (21) காதலித்து கடந்தாண்டு சமயபுரம் ஆதிமாரியம்மன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனா்.
திருவெறும்பூா் பகுதி பாலாஜி நகரில் வாடகை வீட்டில் தம்பதியா் வசித்த நிலையில், கணவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுமதி அவரது செல்லிடப்பேசியை பாா்த்தபோது அதில் காா்த்தி பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் படங்கள் இருந்தது தெரியவந்தது.
இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் காா்த்தி ஏற்கெனவே திருச்சியில் ஸ்டெல்லா, சென்னையில் கிருஷ்ணவேனி, மீனா உள்ளிட்ட 3 பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்தது சுமதிக்குத் தெரியவந்தது. இதுகுறித்த கேட்ட சுமதியை காா்த்தி கடுமையாகத் தாக்கி கொல்ல முயன்றாராம்.
இதுகுறித்து சுமதி அளித்த புகாரின்பேரில் லால்குடி அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் பழனியம்மாள் வழக்குப் பதிந்து காா்த்தியைக் கைது செய்தாா். லால்குடி நீதிமன்ற உத்தரவின்பேரில் காா்த்தி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.