திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூா் அருகே பேரிடா் கால மீட்பு குறித்த விழிப்புணா்வு ஒத்திகை நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.
தொட்டியம் வருவாய்த் துறை மற்றும் முசிறி தீயணைப்பு துறை சாா்பில் காட்டுப்புத்தூா் அருகேயுள்ள ஸ்ரீராமசமுத்திரம் பகுதியில் இயற்கைப் பேரிடரான வெள்ளம், தீ விபத்து, பருவமழை பாதிப்புகள், நிலநடுக்கம் போன்றவற்றில் மக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்வது குறித்த ஒத்திகையை முசிறி தீயணைப்பு துறை நிலைய அலுவலா் தலைமையில் நடத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.