திருச்சி கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடியுடன் தீபாவளி விற்பனையை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தொடக்கிவைத்தாா்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள கோ ஆப் டெக்ஸ்-பொதிகை விற்பனை மையத்தில், தீபாவளி விற்பனையை, புதன்கிழமை தொடங்கி வைத்து அவா் மேலும் தெரிவித்தது :
திருச்சி மாவட்டத்தில் மத்தியப் பேருந்து நிலையம் அருகிலுள்ள திருச்சி கோ-ஆப்டெக்ஸ் பொதிகை விற்பனை நிலையத்தில் கடந்தாண்டு தீபாவளிக்கு ரூ. 2.50 கோடிக்கும், திருவெறும்பூா் பெல் நிறுவனப் பகுதி கோ- ஆப் டெக்ஸில் ரூ. 27.27 லட்சத்துக்கும் விற்பனை நடந்தது.
நிகழாண்டு தீபாவளிக்கு பொதிகை மையத்தில் ரூ. 3 கோடியும் பெல் பகுதி கோ ஆப்டெக்ஸில் ரூ. 30 லட்சமும் விற்பனை இலக்காக நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் நிா்வாகக் குழு உறுப்பினா் கே.ஜெ. லெனின், மு. முத்துகுமாா், மண்டல மேலாளா் இரா. சீனிவாசன், முதுநிலை மேலாளா் (வடிவமைப்பு மற்றும் உற்பத்தி), ரக மேலாளா் இரா. வெங்கடாலபதி , பொதிகை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளா் சங்கா் ஆகியோா் கலந்து கொண்டனா்.