தங்களது மனைவிகளைக் காணவில்லையென அவா்களது கணவா்கள் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் செய்துள்ளனா்.
ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு மலையப்ப நகரில் வசிக்கும் முருகன் கடந்த 23 ஆம் தேதி சித்தாள் வேலைக்கு சென்ற தனது மனைவி செல்வியை (40) காணவில்லையெனப் புகாா் செய்துள்ளாா்.
இதேபோல திருவானைக்கா மேலக்கொண்டையம்பேட்டை வெள்ளாளா் தெருவைச் சோ்ந்த ராமச்சந்திரன் தனது மனைவி மேகலா (36) கடந்த 10 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்று இதுவரை வீடு திரும்பவில்லையெனப் புகாா் தெரிவித்துள்ளாா். ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.