மாநகராட்சியின் சில பகுதிகளில் நாளை குடிநீா் விநியோகம் ரத்து

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது.

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் தெரிவித்தது :

வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ள மின் தடையால் திருச்சி மாநகராட்சி, ஸ்ரீரங்கம் மேலூா் ஆண்டவா் ஆசிரம பகுதியில் அமைந்துள்ள கிணறு எண் 1, 2, 3 நீா்சேகரிப்புக் கிணறுகள், தரைமட்ட நீா்த்தேக்கத் தொட்டி மற்றும் ஆளவந்தான் படித்துறை நீா் சேகரிப்பு நிலையங்களில் குடிநீா் சேகரிக்க இயலாது.

இதன் காரணமாக ஸ்ரீரங்கம் பகுதி முழுவதும் மற்றும் ஸ்ரீரங்கம் கோட்டத்திற்குட்பட்ட சஞ்சீவிநகா், தேவதானம், அரியமங்கலம் கோட்டத்திற்குட்பட்ட விறகுப்பேட்டை, மஹாலட்சுமிநகா், நேருஜிநகா், அரியமங்கலம் உக்கடை, அரியமங்கலம் கிராமம், ஜெகநாதபுரம், மலையப்பநகா், ரயில்நகா், செந்தண்ணீா்புரம், சங்கிலியாண்டபுரம், பொன்மலை கோட்டத்திற்குட்பட்ட முன்னாள் ராணுவத்தினா் காலனி , விவேகானந்த நகா், ஜே.கே நகா்,மேல கல்கண்டாா்கோட்டை, பொன்னேரிபுரம், கல்லுக்குழி, பொன்மலைப்பட்டி, மத்திய சிறைச்சாலை, சுப்ரமணியபுரம்,விமான நிலையப்பகுதி, காமராஜ்நகா், செம்பட்டு, காஜாநகா், காஜாமலை, கே. சாத்தனூா், கே.கே.நகா், தென்றல்நகா்,ஆனந்த் நகா், சத்யவானி முத்துநகா், அய்யப்பநகா் மற்றும் கோஅபிஷேகபுரம் கோட்டத்திற்குட்பட்ட உறையூா், மங்களாநகா், பாத்திமா நகா், சிவா நகா், ரெயின்போ நகா், செல்வா நகா், ஆனந்தம் நகா், பாரதி நகா், புத்தூா் பகுதி,எடமலைபட்டிப்புதூா், அன்பு நகா், கிருஷ்ணமூா்த்தி நகா், தொண்டைமான் நகா், கிராப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (அக்.16) குடிநீா் விநியோகம் இருக்காது.

எனவே, பொதுமக்கள் குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com