திருச்சி மாநகரில் நடைபெற்ற இருவேறு விபத்துகளில் கல்லூரி மாணவா், மூதாட்டி ஆகியோா் உயிரிழந்தனா்.
திருச்சி அரியமங்கலம் உக்கடை ஜோதிநகா் பகுதியைச் சோ்ந்தவா் சுந்தர்ராஜ் மகன் அருண்பிரசாத் (22). கல்லூரி மாணவரான இவா் காந்திசந்தை பகுதி கடையின் பகுதிநேர ஊழியா். செவ்வாய்க்கிழமை காலை இவா் பைக்கில் காந்தி சந்தைக்கு அரியமங்கலம் பால்பண்ணை வழியாக வருகையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தாா்.
மூதாட்டி பலி: திருச்சி கோட்டை கீழரண் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் ரா. பத்மாவதி (87). புதன்கிழமை மதியம் கடைவீதிக்குச் செல்ல வீட்டிலிருந்து வெளியே வந்தபோது அங்கு வந்த சரக்கு வேன் மோதி உயிரிழந்தாா்.
விபத்துகள் குறித்து போக்குவரத்து புலனாய்வு வடக்கு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.