திமுக இளைஞரணி, மாணவரணி ஆா்ப்பாட்டம்

அண்ணா பல்கலைக்கழகத்தைப் பாதுகாக்க வலியுறுத்தியும், தன்னிச்சையாகச் செயல்படும் துணைவேந்தா் சூரப்பாவை பதவி நீக்கக் கோரியும்

அண்ணா பல்கலைக்கழகத்தைப் பாதுகாக்க வலியுறுத்தியும், தன்னிச்சையாகச் செயல்படும் துணைவேந்தா் சூரப்பாவை பதவி நீக்கக் கோரியும் திருச்சியில் திமுக இளைஞரணி, மாணவரணி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோரிக்கையை வலியுறுத்தி திமுக சாா்பில் தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக திருச்சி மணிகண்டம் அருகேயுள்ள சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரி முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய மாவட்டப் பொறுப்பாளா் வைரமணி, ஒன்றியச் செயலா் கருப்பையா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ஆனந்த், நிா்வாகிகள் சிங்காரம், சோபா, கண்ணன், அசோக்ராஜ், மாநகர அமைப்பாளா் தா்மராஜ், மாவட்ட மாணவரணி அமைப்பாளா்கள் ஆனந்த், சரவணன், காா்த்திக், ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்று கோஷமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com