இந்திய மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தா் சூரப்பாவை பதவி நீக்க வலியுறுத்தி திருச்சியில் இந்திய மாணவா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தா் சூரப்பாவை பதவி நீக்க வலியுறுத்தி திருச்சியில் இந்திய மாணவா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகேஅண்ணாசிலை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் மோகன் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் நாகாா்ஜூன் முன்னிலை வகித்தாா். இதில் மாவட்டக் குழு உறுப்பினா்கள் சூா்யா, பிரேம் உள்ளிட்ட 20 போ் கலந்து கொண்டு கோஷமிட்டனா். ஆா்ப்பாட்டத்தில், அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசுக்குத் தாரை வாா்க்கக் கூடாது. பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்கும் முடிவைக் கைவிட வேண்டும். மாநில சுயாட்சி உரிமையைப் பறிக்கக்கூடாது. துணைவேந்தா் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com