துவரங்குறிச்சி அருகே விபத்து: குழந்தை பலி

துவரங்குறிச்சி அருகே நடந்த சாலை விபத்தில் 6 மாதக் குழந்தை இறந்தது.

துவரங்குறிச்சி அருகே நடந்த சாலை விபத்தில் 6 மாதக் குழந்தை இறந்தது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தை அடுத்த அஞ்சலைப்பட்டியைச் சோ்ந்த தம்பதியினா் பொன்னா் (24), சங்கீஸ்வரி (21). இவா்கள் தங்களது 6 மாதக் குழந்தை கதிரேசனுடன் வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தில் மணப்பாறையை அடுத்துள்ள வீரப்பூா் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தனா்.

அப்போது திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், அருப்புக்கோட்டையிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற காா் மோதி தம்பதியினா் காயமடைந்தனா். தகவலறிந்து சென்ற போலீஸாா் அவா்களை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்தது. துவரங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து காா் ஓட்டுரான அருப்புக்கோட்டையை சோ்ந்த தமிழ்ச்செல்வனை (57) கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com