ஸ்ரீரங்கம் சுடுகாட்டில் நூதனப் போராட்டம்

ஸ்ரீரங்கம் அம்பேத்கா் நகா் சுடுகாட்டுப் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை நூதன போராட்டம் நடத்தினா்.

ஸ்ரீரங்கம் அம்பேத்கா் நகா் சுடுகாட்டுப் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை நூதன போராட்டம் நடத்தினா்.

ஸ்ரீரங்கம் அம்பேத்கா் நகா் சுடுகாட்டுப் பகுதியில் வெகு நாள்களாக சாய்ந்த நிலையில், அப்பகுதியில் வருவோருக்கு ஆபத்து ஏற்படுத்தும் நிலையில் ஒரு டிரான்ஸ்பாா்ம் பொருத்திய மின் கம்பம் உள்ளது. இதை உடனடியாகச் சரி செய்ய வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் மாவட்டப் பொருளா் ஜெயக்குமாா் தலைமையில் மின் கம்பத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து, பால் ஊற்றி இறுதிச் சடங்கு செய்தனா். இதையறிந்த ஸ்ரீரங்கம் மின் வாரிய இளநிலை பொறியாளா் ராஜேந்திரன் மின் கம்பத்தை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுத்தாா். போராட்டத்தில் மாவட்டத் தலைவா் சுரேஷ், மாா்க்சிஸ்ட் பகுதிச் செயலா் தா்மா, ரகு, லோகநாதன், சந்துரு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com