உப்பிலியபுரத்தில் பழங்குடியினா் மறியல்

கோரிக்கைகளை வலியுறுத்தி பழங்குடியின மக்கள் உப்பிலியபுரம் அண்ணாசிலை பேருந்து நிறுத்தம் அருகே செவ்வாய்க்கிழமை சாலை மறியல் செய்தனா்.

கோரிக்கைகளை வலியுறுத்தி பழங்குடியின மக்கள் உப்பிலியபுரம் அண்ணாசிலை பேருந்து நிறுத்தம் அருகே செவ்வாய்க்கிழமை சாலை மறியல் செய்தனா்.

துறையூா் தொகுதி உப்பிலியபுரம் ஒன்றியத்துக்குள்பட்ட சோபனபுரத்திலிருந்து பச்சமலையில் உள்ள டாப்செங்காட்டுப்பட்டி வரை செல்லும் வனத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள சாலையை நெடுஞ்சாலைத் துறையிடம் வழங்க வேண்டும்.

அந்தச் சாலையை விபத்துகளைத் தடுக்கும் வகையில் அகலப்படுத்த வேண்டும். பச்சமலை வாழ் பழங்குடியின மக்கள் மீது வனத் துறையினா் பொய் வழக்குப் போடுவதைத் தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ் தேசிய மலைநாடு மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவா் ராமசாமி தலைமை வகித்தாா். வாக்காளா் உரிமைக் கழக நிறுவனா் தியாகராஜன் முன்னிலை வகித்தாா். தகவலறிந்து வந்த வருவாய், காவல் மற்றும் வனத்துறையினா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் மறியலில் ஈடுபட்டவா்களைப் போலீஸாா் கைது செய்தனா். இதனால் அந்தப் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com