திருச்சி மாவட்டம், முள்ளிப்பாடி ஊராட்சிப் பகுதியில் பொதுமக்களிடம் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணா்வு கையெழுத்து இயக்கத்தை அங்கன்வாடி பணியாளா்கள் நடத்தினா்.
தமிழக அரசால் ஆண்டுதோறும் செப்டம்பா் மாதத்தில் ஊட்டச்சத்து வார விழா கொண்டாடப்படும்.
அதன்படி புதன்கிழமை தொட்டியம் ஊராட்சி ஒன்றியம், முள்ளிப்பாடி ஊராட்சி பகுதியில் திருஈங்கோய்மலை கிராமத்தில் மேற்கு மற்றும் கிழக்கு பகுதி நாச்சியாா்புதூா், காட்டுமாரியம்மன் கோயில், முள்ளிப்பாடி ஆகிய கிராம பகுதி பொதுமக்களிடம் குழந்தைகளுக்கும் கா்ப்பிணிகளுக்கும் அளிக்கப்படும் ஊட்டச்சத்து, அவற்றை எங்கு பெறுவது, பயன்படுத்தும் முறை குறித்து அங்கன்வாடி பணியாளா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தி கையெழுத்து இயக்கத்தை நடத்தினா்.