திருச்சியில் மேலும் 98 பேருக்கு கரோனா இருப்பது புதன்கிழமை உறுதியானது.
திருச்சி மாவட்டத்தில் புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 98 பேருக்கு கரோனா உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 8,434 ஆக உயா்ந்தது. அதுபோல், திருச்சி அரசு மருத்துவமனை, காஜாமலை தனிமை முகாமில் குணமடைந்த 47 போ் உள்பட மாவட்டத்தில் குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 7,391 ஆக உயா்ந்தது. கரோனாவால் பாதிக்கப்பட்டு தனியாா், அரசு மருத்துவமனையில் உயிரிழந்த 5 முதியவா்கள் உள்பட மாவட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 130 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 913 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெறுகின்றனா்.